Thursday, November 13, 2014

special economic zone or special cscape zone

போன ஞாயிற்றுக் கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் எனாவூரில் படித்துக் கொண்டிருக்கும் மகளை பார்க்கப் போனேன்.15 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் பிரதான சாலை வழியாகப் போனால் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலை தவிர வேறொன்றும் இருக்காது. பின் தங்க நாற்கரசாலை வந்தது.நிறைய கண்டெய்னர் லாரிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.பல தாபாக்கள்,நாஸ்டா கடைகள் சாலைகளில் முளைத்தன.

பின்னர் சிப்காட் வந்தது. ஸ்பெசல் எக்னாமிக் சோன் வந்தது.சாலைகளில் சுங்க வசூல் வந்தது.நோகியா,பாக்ஸ்கான்,செய்ன் கோபன்,டொயோட்டா என பஸ்சில் பொகும் போது பார்க்கும்படியான பன்னாட்டு கம்பெனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி வந்தன.சென்னையிலிருந்து இங்கெல்லாம் வேலை தேடி போய் அலைந்தார்கள்.ஸ்ரீபெரும்புதூர்,பூந்தமல்லியில் மனை,கொடைகூலி எகிறியது.சாலைகளில் குளிரூட்டு ஹோட்டல்கள்,லாட்ஜ்கள் வந்தன.

கோட்டு,சூட்டு போட்ட சி.இ.ஓக்கள்,சேர்மன்கள்,பன்னாட்டு தூதர்கள் சென்னை கோட்டைக்கு வந்து முதல்வரைப் பார்ப்பார்கள்;பூங்கொத்து தந்து போவார்கள். பேட்டி தந்து போவார்கள். கோட்டை எழுந்தருளும் சாமிகள் இத்தனாயிரம் டாலர் முதலீடு வந்தது என்பார்கள்.ஊரெல்லாம் தண்ணீர்,மின்சாரம் தட்டுப்பாடு இருக்கும்.ஆனால் இந்த சோன்களில் எந்த வெட்டும் இருக்காது.சந்தை விலையைவிட மிகக் குறைந்த விலைக்கு அடிமனையை விற்றார்கள்;குத்தைகக்கு தந்தார்கள்.பதினைந்து ஆண்டுகள் வரிவிலக்கு என்றார்கள்;சலுகைகள் தந்தார்கள்.

இப்பொழுது பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன.வந்த கம்பெனிகள் அனைத்தும் இங்குள்ள தொழிலாளர் சட்டங்கள்,தொழிற்சங்க உரிமைகள் எதைனையும் மதிக்கவில்லை.அரசாங்கம் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக நின்று தொழிலாளர்களுக்கு எதிராக தடியை சுழற்றுகிறது. நவம்பர் 1 முதல் நோகியா 25 வயது கொண்ட இளந்தொழிலாளர்களை கட்டாய ஓய்வு தந்து வெளியே அனுப்பியது.ஆலையை கைமாற்றிக் கொண்டது.

வந்த டாலர் முதலீடு தொழிலாளர்கள், பொதுமக்களை ஏமாற்றி வந்த வழியே சென்று விட்டது.இந்த ஓடுகாலி கம்பெனிகளைத்தான் மோடி ஊர் ஊராக சென்று பேசி செல்பி எடுத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் படங்களைப் பகிர்ந்து கொண்டு வாங்கோ வாங்கோ என்று அழைக்கிறார்.நேற்று வரை இந்த பணியை காங்கிரஸ் செய்தது.

தேவை ஓடுகாலி டாலர் கம்பெனி அல்ல.வந்த லாபத்தை இங்கேயே மறுமுதலீடு செய்து,எவரையும் வீட்டுக்கு அனுப்பாத,உற்பத்தியை செய்யும் நிறுவனங்கள்.சீனாவில் அப்படித்தான் பன்னாட்டு முதலீடு வறவேற்கப்படுகிறது.கூடுதலாக சீனாவில் பத்தாண்டு முடிந்தால் அந்த கம்பெனி நாட்டிற்கு சொந்தமாகிவிடும்.அது சோசலிச அரசு.இது கார்ப்பரேடுகளுக்கு முறைவாசல் செய்யும் அரசு.

இன்று நோகியா ஆலைவாசல் பூட்டப்பட்டு கிடக்கிறது.ஜெர்மன் செய்ன் கோபன் கிளாஸ் கம்பெனியும் தொழிலாளர்களுக்கு சலுகை இல்லை,ஓவர் டைம்,அத்துக்கூலி என்று சண்டித்தனம் செய்கிறது.பன்னாட்டு கம்பெனி,செழுமையான வாழ்வு என்று நம்பிய அப்பாவி ஊழியர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள்.

சிஐடியூ  இங்கே சங்கம் ஆரம்பித்து,ஆலைக்கு வெளியே சங்கக் கொடி ஏற்றவும் உரிமை மறுக்கப்பட்டது.அரசு நிர்வாகத்தின் பக்கம் நின்று கொண்டது.தொடர்ந்து போராட்டம்,டிஸ்மிஸ்,போராட்டம்,முத்தரப்பு பேச்சுவார்த்தை,கைது,சங்கிலி பூட்டப்பட்டு கைது என்று தொடர்போராட்டம் நடந்தும் இந்த புரிந்துணர்வில் வந்த காப்பரேட்டுகள்,அரசுகளினூடான உறவில் புரிந்துணர்வை காப்பற்றிக் கொண்டது.

பொதுமக்கள்-தொழிலாளர்கள்-தொழிற்சங்கம் இடையே புரிந்துணர்வு வந்தாக வேண்டும். தருவது போல் வந்து தட்டிப்பறிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்க்கும் புரிந்துணர்வு வந்தாக வேண்டும்.தாராளம்,தனியார் கொள்கையை எதிர்த்த புரிந்துணர்வு வந்தாக வேண்டும்.

No comments:

Post a Comment