Tuesday, December 11, 2012

ப்ரான்சிஸ் த்ரோபாவின் உரத்தக் குரல்






நேற்று சென்னையில் தமுஎகச சார்பாக தொடங்கிய எழுத்தாளர் கலைஞர்களின்  2 ஆவது உலகப் படவிழாவில் ஃப்ரான்ஸ் புதிய அலை சினிமாவை தொடங்கி வைத்த முன்னோடியான ஃப்ரான்சிஸ் த்ரோபாவின் 400 blows படம் பார்த்தேன்.

59ல் வந்த படம்;கருப்பு வெள்ளை படம்.இன்றைக்கும் புதியதாய் இருக்கிறது படம்.அடுத்தடுத்த பணிகளுக்கு மனம் ஆட்பட்ட போதும்   படத்தின் 12 வயது சிறுவன் ஆண்டனி, மனதோடு வந்து கொண்டே இருக்கிறான்.

வீட்டில்,பள்ளியில் ஆண்டனி  சந்திக்கிற கசப்புகள்,வீட்டை விட்டு வெளியேற   வைக்கின்றன.சீர்திருத்தப் பள்ளி திருத்துவதை விட ,அதன் விதிகள்,கறார்கள் அவனை புரட்டிப் போடுகின்றன.தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறான் பாலம்,புல்வெளி,ஆற்றுவெளி,கடல்வெளி என்று ஓடிக் கொண்டே இருக்கிறான்.விதிகளும் கறார் தன்மையும் விடாது துரத்துகின்றன.தப்பிக்க வழியின்றி திகைக்க படம் முடிகிறது.

காட்சிகளும் காமிரா நகர்வும் ,ஸ்டுடியோவை விட்ட இயற்கை சூழலும்,இசையும் இன்னும் புதிதாய் இருக்கிறது.

வீட்டின் ,வெளியின் தப்புகள் அவர்கள் மனதை புரட்டிப் போட்டு விடுகின்றன.குழந்தைகள் முன்பு தப்பு செய்யாதீர்கள்.குழந்தைகள் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று படம் பேசுகிறது.

20 ஆண்டுகள் சென்ற பிறகே 77 களில் கோலிவுட்டிலும் நிர்மாணங்களை விட்டொழித்த இயற்கை ஸ்டுடியோ ஊடான காட்சி பதிவுகள் வரத் தொடங்கின.இந்தப் படத்தில் காட்டப்படுகின்ற கட்டுமான பணிகளுக்கான கிரேன்கள்,நமது ஊரில் சில ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் இருக்கின்றன.ஃப்ரான்ஸ் சினிமாவில் மட்டுமல்ல,தொழிற்நுட்பத்திலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்றதை 400 blows உணர முடிகின்றது.

ஆண்டனியின் `ப்ளோஸ் ’உரத்ததுக்   கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

No comments:

Post a Comment