இழிந்த எம் வாழ்வின் மேல்
ஒழுகும் பேனாக்கள்
-இராதெ.முத்து
அரசிதழின் ஆங்கிலமும்
அரசாளும் இந்தியும்
அன்னைத் தமிழை
அரசாளத் த்டுத்துக் கொண்டிருக்கும்
கூட்டாட்சி அதிகாரத்தின் உள்ளறைகளில்
வசதியாய் உட்கார்ந்து கொண்டு
அதிகாரத்தின் ருசியை சுவைத்துக் கொண்டு
வாரன் ஆண்டர்சன் கொன்ற பிணங்களைக் கடந்தபடி
வெண்சாமரம் வீசும் வீண்ர்களை விதந்தோதியபடி
தெற்க்குவாசல் திறக்காத சிதம்பர ரகசியத்தை சொல்லாதபடி
திறக்கப்பட்ட உத்தப்புரப் பாதைகளில்
திறக்கப்படாத சமூக நீதியை உணராதபடி
இழிந்த எம் வாழ்வின் மேல்
மலத்தையும் அதிகாரத்தையும் வீசும்
மனுவதிகார மையத்தை ஆரத்தழுவியபடி....
கதைக்கிறீர்கள்;எழுதுகிறீர்கள்.
No comments:
Post a Comment