Monday, August 8, 2011

காவிரி


மண்ணில்
மனதில்
பால் வார்ப்பவள் நீ

உன் திருமுன்
காதல் கனிகிறது

உன்னால்
எம் பயிர்
தழைக்கிறது
எம் உயிர்
வளர்கிறது

எம் கலை
இசை
எழுத்திற்க்கு
தாய்ப்பால் நீ

நீ நடந்தால்
நடப்போம்
கிடந்தால்
கிடப்போம்

நீ வந்தால்
வனப்போம்
பொய்த்தால்
உயிர் துறப்பொம்

எம்
பாவிரி
எம்
வாழ்விரி
எம்
யாழ்விரி
எம்
ஞானவரி
எம்
மாவிரி
எம்
காவிரி
உன்னை சரண் அடைந்தோம்!

1 comment:

  1. எம் கலை இசைக்கு தாய்ப்பால் நீ
    அருமையான வரிகள்
    தொடர்ந்து இயங்குங்கள்

    ReplyDelete